கொரோனாவால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

எந்த அறிகுறியும் இல்லாமல் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் ஒரே ஒரு பொது நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டார் என தெரியவந்துள்ளது. நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பின் சென்னை திரும்பிய அவர், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

மேலும் கொரோனா பரவல் காரணமாக எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை விஜயகாந்த் தவிர்த்து வந்தார். இதனிடையில் தேமுதிக-வின் 16ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கடந்த 14ஆம் திகதி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்றார். அப்போது அங்கு அதிகளவிலான தொண்டர்கள் அவருடன் அருகில் இருந்தனர்.

இந்த நிலையில் தான் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் விஜயகாந்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தேமுதிக கொடியேற்றினார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!