தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று!

விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக சில தினங்களுக்கு முன் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அதன் பின், அவருக்கு செப்டம்பர் 22-ஆம் திகதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 24-ஆம் திகதி மருத்துவமனை நிர்வாகம், அவர் உடல்நிலை சீராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, விஜயகாந்த் தற்போது பூரண உடல் நலத்துடன் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அவரது மனைவி பிரேமலதா கூறியிருந்தார்.

அதன் பின், தேமுதிக துணைச் செயலாளர் சுதிஷ், விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்புவார் என கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையிலேயே, இவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!