1024 கிலோ மஞ்சள் பேசாலையில் மீட்பு!

மன்னார் – பேசாலை – பெரிய கரிசல் பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் 1024 கிலோமஞ்சள் மூட்டைகள் பொலி ஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பேசாலை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சந்தேகத்திற் கிடமான லொறியை பரிசோதனை செய்த போது மஞ்சள் மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த லொறியிலிருந்து 29 மஞ்சள் மூடை களைப் பறிமுதல் செய்ததாக பேசாலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!