சஜித்தின் கூட்டத்தின் மீது கல்வீச்சு!

கொழும்பு- இரத்மலானை பிரதேசத்தில் நேற்று இரவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட கூட்டத்தில், கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்தின் மீது மர்ம நபர்களால் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சஜித் பிரேமதாஸவின் மெய்ப் பாதுகாவலர்களும், விசேட அதிரடிப்படை அதிரடிப்படையினரும் அவரை சுற்றி பாதுகாப்பு வழங்கினர்.

சஜித் பிரேமதாச சற்று நேரம் தமது உரையை இடைநிறுத்தி விட்டு தொடர்ந்து உரையாற்றி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!