இந்தியாவில் திருமணமான சில மாதங்களில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் கணவர் குடும்பத்தார் அவரை கொலை செய்து விட்டதாக பெண்ணின் தந்தை கண்ணீருடன் கூறியுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் ராஜரப்பாவை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் மகள் சோனம் குமாரிக்கும் சாய்நாத் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சோனம் தற்கொலை செய்து கொண்டதாக வினோத்குமாருக்கு நள்ளிரவில் தகவல் வந்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், திருமணமான ஒரு மாதத்தில் இருந்து ரூ 2 லட்சம் மற்றும் பைக் வரதட்சணையாக வேண்டும் என சாய்நாத் மற்றும் அவர் குடும்பத்தார் என் மகள் சோனமை கொடுமைப்படுத்த துவங்கினர். சில தினங்களுக்கு முன்னர் எனக்கு போன் செய்த சாய்நாத் வரதட்சணை கொடுக்கவில்லை என்றால் உங்கள் மகனை கொன்றுவிடுவேன் என மிரட்டினார்.
அதே நாளில் நள்ளிரவு 12 மணிக்கு சாய்நாத்தின் மூத்த சகோதரர் எனக்கு போன் செய்து உங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டார் என கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான் அங்கு சென்ற போது என் மகள் தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்தார். என் மகளை அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் தான் கொலை செய்துள்ளனர் என கூறியுள்ளார். இது தொடர்பான புகாரையடுத்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!