தற்போதைய அரசியல்வாதிகள் சீரழிந்து போவதற்கு அவர்களின் மனைவிமாரே காரணம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற, நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் மனைவி சிறந்த நோக்கத்தை உடையவராக இருந்தார். எனினும் தற்போதைய அரசியல்வாதிகள் பலர் சீரழிந்து போவதற்கு அவர்களுடைய மனைவிமாரே காரணமாகி விடுகின்றனர்.
ஜே.ஆரின் மனைவியை பின்பற்றினால் சிறந்தது” என்று மேலும் கூறியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!