‘பல தாயார்களுடன் உடல் உறவில் ஈடுபட்டிருக்கிறேன்’ – தொலைக்காட்சி நேரலையில் அதிர்ச்சி தகவலை கூறிய அமெரிக்கர்!

அமெரிக்காவில் ஜோ டோனர் என அறியப்படும் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளில் 150 பிள்ளைகளுக்கு தாம் தந்தையானதாக தொலைக்காட்சி நேரலையில் அம்பலப்படுத்தியுள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக உயிரணு தானத்தில் ஈடுபட்டுவரும் ஜோ டோனர், தாம் தந்தையான பாதிக்கும் மேற்பட்ட பிள்ளைகளின் தாயார்களுடன் உடல் உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் சென்று இவர் உயிரணு தானம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பலமுறை தான் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட சம்பவங்களும் ஏற்பட்டுள்ளதாக ஜோ டோனர் தெரிவித்துள்ளார். மேலும் வீரியம் மிகுந்த உயிரணு காரணமாகவே, ஆண்டுக்கு 10 முறை கருவுறும் அளவுக்கு தம்மால் உயிரணு தானம் வழங்க முடிந்தது என கூறும் அவர், ஊரடங்கு காலகட்டத்தில் தாம் அர்ஜென்டினாவில் சிக்கியதாகவும், அங்கேயும் 5 பேருக்கு குழந்தை பாக்கியம் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பணத் தேவைகளுக்காக இதை தாம் செய்யவில்லை எனவும், ஒரு சேவையாகவே மேற்கொண்டு வருவதாகவும் ஜோ டோனர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!