மேலும் 11 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு!

கம்பஹா மாவட்டத்தில் முன்னதாக ஊரடங்கு அமுலான மூன்று பொலிஸ் பிரிவுகள் உட்பட மேலும் 12 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கம்பஹா பொலிஸ் பிரிவு உட்பட கிரிதிவெல, தொம்பே, பூகொட, கனேமுல்ல, வீரகுல, வெலிவேரிய, மல்வதுஹிரிபிட்டிய, நிட்டம்பவு, மீரிகம, பள்ளேவெல மற்றும் யக்கலை பொலிஸ் பிரிவுகளிலும் மாலை 6 மணி முதல் ஊரடங்கு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!