டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்கா அழிந்துவிடும்: ஒபாமா மனைவி காட்டம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா பரவலை தவறாக கையாண்டார் என ஒபாமா மனைவி மிச்சேல் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சமூகவலைதளத்தில் மிச்சேல் ஒபாமா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டிரம்ப் ஒரு இனவெறியர் என கடுமையாக சாடியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், டிரம்ப் கொரோனா பரவலை வேண்டுமென்றே தவறாக கையாண்டிருக்கிறார்.

சமூகத்தில் பிரிவினையையும், அச்சத்தையும் தூண்டும் வகையில் சதி வேலைகளில் ஈடுபடுவது தான் டிரம்ப்பின் கொள்கைகள் ஆகும். அவர் மட்டும் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அது அமெரிக்காவை அழித்து விடும் என மிச்சேல் காட்டமாக கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!