விசாரிக்க சென்ற புலனாய்வு அதிகாரி சடலமாக மீட்பு!

இராணுவப் புலனாய்வுதுறை அதிகாரி ஒருவரின் சடலம் இன்று அதிகாலை வவுனியா -பட்டாணிச்சூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பட்டாணிச்சூர் பட்டைக்காட்டு பகுதியிலே 33 வயது மதிக்கத்தக்க இராணுவ அதிகாரியே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இப்பகுதியில் விசாரணை ஒன்றுக்காகச் சென்ற குறிப்பிட்ட அதிகாரி திரும்பி வராமையால், அவரைத் தேடிச் சென்ற போது இப்பகுதி கிணறு ஒன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!