மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக நிலையத்திற்குபட்ட மேலும் 11 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர வர்த்தக நிலையத்திற்குபட்ட ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு நேற்றைய தினம் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகியுள்ளன.

இந்த நிலையிலேயே, 11 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!