ஊடகவியலாளர்கள் மீது மரக் கடத்தல்காரர்கள் தாக்குதல்!

முல்லைத்தீவில் மரக்கடத்தல் தொடர்பாக செய்தி சேகரிப்பிற்கு சென்ற இரு சுயாதீன ஊடகவியலாளர்கள் மீது தாக்குத் நடத்தப்பட்டுள்ளது.

மரக்கடத்தலில் ஈடுபட்ட நபர்களே ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதுடன், பொலிஸ் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!