3 பிரதேசங்களுக்குள் தடை!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள மாலிக்காதென்ன, எலுவாபிட்டிய மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகள் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் அடையாளம் காணப்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கம்பஹா மாவட்டச் செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்தார்.

அதன் படி குறித்த மூன்று கிராம சேவகர் பிரிவிற்குப்பட்டவர்கள் 7 ஆவது கிராம சேவகர் பிரிவிற்கு உட்பிரவேசிக்கவோ வெளியேறவோ முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களில் நான்கு பௌத்த துறவிகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!