நேற்று 194 பேர்! – 5000ஐ வேகமாக கடந்தது!

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் 194 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000 ஐக் கடந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 80 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஏனைய 114 பேர் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இதன்காரணமாக ஒக்டோபர் நான்காம் திகதி தெரியவந்த மினுவாங்கொட கொத்தணியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1591 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!