242 கொள்கலன்களை மீள அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!

பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள அனுப்புமாறு, மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொள்கலன்களை மீண்டும் ஏற்றுமதி செய்யக் கோரி மாற்றுக் கொள்கைக்கான மையம் தாக்கல் செய்த வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு மேன் முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!