மினுவங்கொட அலையில் நேற்றும் 113 பேர் சிக்கினர்!

மினுவாங்கொட வைரஸ் பரவலுடன் தொடர்புடைய மேலும் 113 நோயாளிகள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மினுவாங்கொடையில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1721 ஆக அதிகரித்துள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஐந்து நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இராணுவதளபதி சவேந்திரசில்வா மினுவாங்கொடையில் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 108 பேரும் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கையில் இதுவரை பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 5168 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!