மட்டக்களப்பு புதிய அரச அதிபராக கருணாகரன்!

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான புதிய அரச அதிபராக இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்தவரும் தற்போதைய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றும் கே.கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதம், பொது நிர்வாக மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சால் நேற்று (14) பிற்பகல் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக அரச அதிபர் கடமையாற்றிய திருமதி கலாமதி பத்மராஜா, பொது நிர்வாக மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கு உடனடியாக அமுலாகும் வரையில் இணைக்கப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!