கொழும்பில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை!

கொழும்பில் வசிப்பவர்கள் கொரோனா தொற்று குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

“கொரோனா வைரஸ் என்பது மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடியது. எனவே, சன நடமாட்டம் அதிகமாகவுள்ள பகுதிகளில் அது வேகமாக பரவக்கூடும். எனவேதான் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு கடந்த காலங்களில் கோரியிருந்தோம்.

கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு நகரிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் குறுகிய பிரதேசத்துக்குள் அதிகளவானவர்கள் வசிக்கின்றனர். வீடுகளிலும் அதிகளவானவர்கள் இருக்கின்றனர்.

எனவே, வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் அது வேகமாக பரவக்கூடும். ஆகவே மக்கள் தனது சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரும் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர்.

33 ஆவது கொத்தணி பரவல் மூலம் (மினுவாங்கொட) கொழும்பு மாவட்டத்தில் 160 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில்போல் கொழும்பில் கட்டுப்பாடுகளை விதிக்கும் தீர்மானம் தற்போதைக்கு மேற்கொள்ளப்படவில்லை. எது எப்படியிருந்தாலும் மக்கள் தமது சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேவேளை, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான வசதிகள் உள்ளன. நோயாளிகளுக்கான கட்டில்களும் போதுமாளனவு இருக்கின்றன“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!