இன்று 61 பேருக்கு தொற்றியது!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 61 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (16) இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 58 பேர் தனிமைப்படுத்தல் மையங்களிலும் ஏனையோர் வெவ்வேறு இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,850 ஆக உயர்ந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!