மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மினுவாங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெனிஹிமுல்ல, பெரலாந்தவத்த மற்றும் ஹெலகந்தன ஆகிய கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன. நேற்றுக் காலை முதல் குறித்த கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் தொழில் புரியும் ஊழியர்கள் பெருமளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனை அடுத்து அந்த தொழிலாளர்களுடன் நெருங்கி பழகியவர்களும் கொரோனா வைரஸ்தொற்றுக்கு உள்ளளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கிராமத்தில் உள்ள 500 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!