நேற்று 110 பேருக்கு தொற்று!

மினுவங்கொட கொரோனா தொற்று கொத்தணியில் இருந்து மேலும், 110 தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 38 பேர், ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தலில் இருந்த இவர்களைத் தவிர, இந்த கொத்தணியுடன் தொடர்புபட்டிருந்த மேலும் 72 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மினுவங்கொட தொற்று கொத்தணியில் உள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 1899 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!