மருதங்கேணி, கிருஷ்ணபுரத்தில் கொரோனா சிகிச்சை நிலையங்கள்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில், இரண்டு கொரோனா சிகிச்சை நிலையங்கள் அவசர அமைக்கப்பட்டு வருகின்றன. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய, யாழ். மாவட்டத்துக்கான கொரோனா சிகிச்சை நிலையம் மருதங்கேணி பிரதேச மருத்துவமனையில் அமைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி தொடக்கம் மருதங்கேணி ஆரம்ப மருத்துவமனை, கொரோனா சிகிச்சை நிலையமாக செயற்படத் தொடங்கும் என்று, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்துக்கான கொரோனா சிகிச்சை நிலையத்தை, கிருஷ்ணபுரம் பகுதியில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த, தற்போது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணியிலேயே இந்த சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகிறது.

சுமார் 100 படுக்கைகளைக் கொண்டதாக இந்த சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு வருவதாகவும், இரண்டு வாரங்களுக்குள் இந்தப்பணிகள் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!