மக்களின் இறைமையை மீறுகிறது “20”!

20 ஆவது திருத்தத்தை தாம் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 20ஆவது திருத்தச் சட்டமூலம் மீது நேற்று நடந்த விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“20ஆவது திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுகிறது. ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள், நீதிபதிகள் போன்றோரை நியமித்தல் மற்றும் நீக்குதல் போன்ற அதிகாரம் ஒருவருக்கு வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நீதித்துறை சுதந்திரமாக செயற்பட வேண்டியது அவசியம். ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றுவதற்கான எந்த ஆணையும் மக்களிடமிருந்து பெறப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20ஆவது திருத்தத்தினை எதிர்ப்பதற்கு இதுவே காரணம்.

தமிழ் மக்கள் ஒரு புதிய அரசியலமைப்பிற்கான ஆணையை தொடர்ந்து வழங்கி வந்துள்ளனர். புதிய அரசியலமைப்பிற்கு தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களின் ஒருமித்த கருத்தும் இருக்க வேண்டும். இல்லையென்றால் அதை நாங்கள் நிராகரிப்போம் ” என்றும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!