கொழும்பில் பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம்!

அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கொழும்பின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் கடைகளுக்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பின் ஆறு பிரதேசங்களில் இன்று (22) காலை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, கொழும்பு மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக வதந்திகள் மக்கள் மத்தியில் பரவியுள்ளது.

இந்த நிலையிலேயே பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!