விமல் வீரவன்சவை தாக்க முயன்றார் ஜயந்த கட்டகொட!

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கட்டகொட அமைச்சர் விமல் வீரவன்சவை தாக்க முயன்றார் என தேசிய விடுதலை முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. 20வது திருத்தம் குறித்த கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

20வது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை குறித்து காணப்படும் விடயம் குறித்து தனது கட்சியான தேசிய விடுதலை முன்னணி அதிருப்தி வெளியிட்டுள்ள போதிலும் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க செய்வதற்கான முயற்சியில் ஜயந்த கட்டாகொட ஈடுபட்டார் என விமல்வீரவன்ச பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஜயந்த கட்டாகொட விமல் வீரவன்சவை தாக்க முயன்றுள்ளார், இதனை ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!