866 பேருக்கு தொற்று- ஒரே நாளில் எகிறியது!

நேற்று புதிதாக 866 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7,153 ஆக அதிகரித்துள்ளது. தற்போது,சிகிச்சை பெற்று வருகின்றவர்களின் எண்ணிக்கையும் 3,495 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி அடையாளளம் காணப்பட்டார். மே மாதம் 19 ஆம் திகதி வரை ஆயிரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், ஜூன் மாதம் 24 ஆம்; திகதி அந்த எண்ணிக்கை இரண்டாயிரமாக அதிகரித்தது.

ஓகஸ்ட் 30 ஆம் திகதி 3000 ஆக காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை, ஒக்டோபர் 6 ஆம் திகதி 4000 ஆக உயர்வடைந்தது.

ஓக்டோபர் 13 ஆம் திகதி தொற்றாளர்களின் எண்ணிக்கை 5000 ஆக அதிகரித்தது. கடந்த 10 நாட்களில் இரண்டாயிரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!