பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் திங்கள் வெளியீடு!

2019 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி பல்கலைக்கழக அனுமதிகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் திங்கட்கிழமை(26) வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, ஒக்டோபர் மாத முதல் இரு வாரங்களுக்குள் வெட்டுப் புள்ளிகளை வெளியிட முடியும் என ஆணைக்குழு அறிவித்திருந்த போதும், கொரோனா மற்றும் நீதிமன்ற வழக்கு இழுபறிகள் காரணமாக வெட்டுப்புள்ளி வெளியீடு பிற்போடப்பட்டுக் கொண்டு வருகிறது.

இந்தநிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை(26) வெட்டுப்புள்ளிகளை வெளியிட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!