மின் கம்பத்தில் கார் மோதி ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இருந்து, இராச வீதி ஊடாக பயணம் செய்த கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 34 வயதுடைய, தனபாலசிங்கம் லக்சதீபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவருடன் காரில் பயணம் செய்த 23 வயதுடைய, சிவன் சரலதீபன் என்பவர் பலத்த காயங்களுடன், யாழ். போதனா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!