11 ஆயிரத்தைக் கடந்தது தொற்றாளர் தொகை!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 397 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,060 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் 4,905 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 6,134 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!