ஆஸ்திரியாவில் பயங்கரவாதிகள் துணிகரம்: இருவர் பலி!

ஆஸ்திரியாவின் தலைநகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் உள்ள தேவாலயம் அருகே மர்ம நபர்கள் சிலர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டால், அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியில் நாலபுறமும் சிதறி அடித்து ஓடினர். இதில் அங்கிருந்த ஏராளமான மக்கள் காயமடைந்த நிலையில், 2 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த பொலிசார், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களை விரட்டினர். இதில் ஒருவரை பொலிசார் சுட்டுக் கொன்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஆஸ்திரியாவின் உள்துறை மந்திரி இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், துப்பாக்கிச் சூடு பல நபர்களால் நடத்தப்பட்டதாக கூறினார்.

இதையடுத்து தற்போது சம்பவம் நடந்த பகுதியில் தீவிரவாதி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அதில் துப்பாக்கியுடன் வரும் தீவிரவாதி, அங்கிருக்கும் நபர் ஒருவரை பார்த்தவுடன் துப்பாக்கியால் சுட முயற்சிக்கிறார். அந்த நபர் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, தன்னிடம் இருந்த பாதுகாப்பு துப்பாக்கியை வைத்து சுட, ஆனால் தீவிரவாதி அதற்குள் அவர் மீது பலமுறை துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து சர்வசாதரணமாக நடந்து செல்கிறான்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!