கொரோனா தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவு

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரண்டு உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரும், கிரேண்பாஸ் பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!