புதிதாய் குழந்தை பெற்ற தாய் மரணம்; விசாரணை ஆரம்பம்!

புத்தளம் – மாரவில வைத்தியசாலையில் புதிதாக குழந்தையை பெற்றெடுத்த தாய் ஒருவர், தனிமைப்படுத்தல் வாட்டில் திடீர் மரணமடைந்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 15ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தையை பெற்றெடுத்த குறித்த தாய், 31ம் திகதி விடுவிக்கப்பட்டு மீளவும் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளார்.

குறித்த தாய்க்கு தேவையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். “நாங்கள் எங்களது மகளை வைத்திய சாலைக்கு கொண்டு சென்றோம். கொரோனா சந்தேகத்தில் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டோம். எனது மகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை” என்று அவரது தாயார் தெரிவித்தார்.

“அவர்கள் எதுவும் செய்யவில்லை. குறைந்த பட்சம் அவரை தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றியிருக்கலாம். தனிமை வார்ட்டில் வைத்து எனது மனைவியை இறக்க அனுமதித்துள்ளனர்” என மரணித்த பெண்ணின் கணவர் தெரிவித்தார்.

“குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை. குழந்தையை பெற்றெடுத்த பின் ஏற்பட்ட பிரச்சினையால் இறந்திருக்கலாம்” என்று புத்தளம் மாவட்ட வைததிய சேவைகள் பிரதி பணிப்பாளர் தினுஷ பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!