வடமாகாணத்தில் பொது போக்குவரத்தில் ஈடுபடும் மக்களுக்கு விசேட அறிவிப்பு!

வடமாகாணத்தில் பொது போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் தாம் பயணிக்கும் வாகனங்களின் இலக்கங்களை தரவாக வைத்துக்கொள்ளுமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு தரவுகளை வைத்துக்கொள்வதன் மூலம், ஏதேனும் சந்தர்ப்பத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பொதுபோக்குவரத்தில் பயணித்திருந்தால் அதன் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ள இலகுவாக இருக்குமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!