யாழில் தொற்றுடன் 9 வயது சிறுமி அடையாளம் காணப்பட்டார்.

கொழும்பிலிருந்து வந்த தாயொருவரையும், 3 பிள்ளைகளையும் சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் 9 வயது சிறுமி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் உணவகம் ஒன்றில் பணியாற்றும் தந்தையிடம் சென்று கடந்த 25ம் திகதி திரும்பிய தாய் மற்றும் மகள் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். கொழும்பு – கொட்டாஞ்சேனையில் உணவகம் ஒன்றில் பணியாற்றும் தந்தையிடம் சென்று கடந்த 25ம் திகதி திரும்பிய தாய் மற்றும் மகள் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரிடமும் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் மகளுக்கு கோவிட் -19 நோய் உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் உடுவில் அம்பலவாணர் வீதி உதயசூரியன் சந்தியில் தாய் மற்றும் 2 வயது மகளுக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!