கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை : பணிப்பாளர் சத்தியமூர்த்தி!

யாழ்ப்பாணம் – கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் பிரதேச மக்கள் அச்சமடையத் தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.