மட்டக்களப்பில் தொற்றாளர் தொகை 50 ஆக அதிகரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

செங்கலடியில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்தவருக்கு வியாழக்கிழமை எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பிரிசோதனையில் தொற்று கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து அவரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நேற்ற மேற்கொண்ட பரிசோதனையில் 14, வயது, 16 வயதுடைய பிள்ளைகள், மனைவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்கள் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!