வழமைக்குத் திரும்பியது கொழும்பு!

மேல் மாகாணத்தில் கடந்த 10 நாள்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்டுள்ளது. கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் நெடுஞ்சாலைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கொழும்பு நகர் வழமைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.

எனினும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் பல பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே இருக்கும்.

கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, மோதரை, வாழைத்தோட்டம், கொட்டாஞ்சேனை, வெல்லம்பிட்டி, ஆட்டுப்பட்டித் தெரு, பொரளை, புளுமெண்டல், கரையோர பொலிஸ், மாளிகாவத்தை, தெமட்டகொடை, கிராண்ட் பாஸ் பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும்.

மட்டக்குளியின் மெத்சந்த செவன, மிஹிஜயசெவன, மோதரையின் ரண்முத்து செவன, கிராண்ட்பாஸின் முவதொர உயன, தெமட்டகொடையின் சிறிசந்த உயன, மாளிகாவத்தையின் தேசிய வீடமைப்புத் திட்டம் போன்ற தொடர்மாடிகளிலிருந்து எவரும் வெளியே செல்லவோ, எவரும் உள்ளே வரவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!