கிழக்கில் இதுவரை 107 பேருக்கு தொற்று!

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று (09) ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்படி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இதுவரை கிழக்கு மாகாணம் – திருகோணமலையில் 13 பேருக்கும், கல்முனையில் 20 பேருக்கும், அம்பாறையில் 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!