கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் இறுதிச் சடங்குகளை நடத்தும்போது, சிறுபான்மையின மதத்தவரின் உரிமைகளை மதிக்குமாறு அரசாங்கத்திடம், சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸால் இறந்தவர்களை அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கு, உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறும் ,சர்வதேச மன்னிப்பு சபை இலங்கை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தது.
இதன் அடிப்படையில், சிறுபான்மை மதத்தவர்களின் உரிமைகள் மதிக்கப்படல் வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை தகனம் செய்வது, குறித்த சமூகத்தின் மத நம்பிக்கைக்கு எதிரானது என்று, இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகத்தாலும் எதிர்க்கட்சியாலும் கவலை வெளியிடப்பட்டு வந்த நிலையிலேயே, சர்வதேச மன்னிப்பு சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!