நேற்று 635 கொரோனா தொற்றாளர்கள்!

நேற்று 635 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 625 பேர், பேலியகொட கொத்தணி தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும், ஏனைய 10 பேரும் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து திரும்பியவர்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நாட்டில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 15,350 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் மினுவங்கொட, பேலியகொட கொத்தணியைச் சேர்ந்த தொற்றாளர்களின் எண்ணிக்கையும், 11,858 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, மருத்துவமனைகளில் 5121 பேர் சிகிச்சை பெற்ற வருகின்றனர் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!