சுவிட்சர்லாந்தில் நடைமுறைக்கு வந்த புதிய சட்டம்: மீறினால்…!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ‘Stick’Air’ கார் ஸ்டிக்கர் ஒட்டும் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. காரில் ஸ்டிக்கர் ஒட்டமால் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார் எவ்வளவு மாசுபாட்டை வெளியிடுகிறது என்பதை குறிக்கும் ‘Stick’Air’ ஸ்டிக்கர் காரில் ஒட்டப்பட வேண்டும்.

மாசு அளவு அதிகமாகும்போது, அதிகமாக மாசுப்படுத்தும் கார்கள் நகர மையத்தில் ஓட தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் இப்போது ஜெனீவா நகரில் முழுவீச்சில் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஜெனீவாவில் அமல்படுத்தப்பட்டுள்ள விதிகள் பிரான்சில் அமலில் உள்ள இதேபோன்ற விதிகளை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், தடை விதிக்கப்படுவதற்கான மாசுபாட்டின் அளவில் இரு நாடுகளிடையே வேறுபாடு உள்ளது.

கார் எங்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இப்போது ஜெனீவாவில் ஓடும் அனைத்து கார்களும் மாசுபடுத்தும் ஸ்டிக்கரைக் ஒட்ட வேண்டும் என்பது தெளிவாகிறது.

பிரான்ஸ் ‘Crit’Air’ ஸ்டிக்கர் ஜெனீவாவிலும் செல்லுபடியாகும், ஆனால் ஜெனீவா ‘Stick’Air’ ஸ்டிக்கர் பிரான்சில் செல்லுபடியாகாது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!