மன்னார் அரச அதிபராக நந்தினி!

மன்னார் மாவட்ட அரச அதிபராக நந்தினி ஸ்ரான்லி டி மெல் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 16 ஆம் திகதி தனது கடமையைப் பொறுப்பேற்கவுள்ள இவர் கடந்த 1995இல் இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவானவர். 1995 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மன்னார் கமநல சேவை திணைக்கள உதவி ஆணையாளராகவும், மன்னார் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும், வட மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!