“ட்ரோன்” கண்ணில் சிக்கிய 15 பேர் கைது!

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் விதிமுறைகளை மீறிய 15 பேர் ட்ரோன் கமெராக்களின் உதவியுடன் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவ்வாறான செயற்பாட்டினை முன்னெடுப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

இதன்படி, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், இடம்பெறும் பயணங்களைக் கண்காணிக்க விமானப் படையின் உதவியுடன் ட்ரோன் தொழில்நுட்பப் பயன்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!