முரண்பாடு மோதலாகியது- சுழிபுரத்தில் இருவர் படுகொலை!

யாழ்ப்பாணம் -சுழிபுரம் மத்தி, குடாக்கனைப் பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான முரண்பாட்டின் தொடர்ச்சியாக நேற்றிரவு வீடு ஒன்றுக்குள் நுழைந்து நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படும் போது உயிரிழந்துள்ளார்.

அதே இடத்தைச் சேர்ந்த சின்னவன் செல்வம் (வயது-56) மற்றும் இராசன் தேவராசா (வயது-31) என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால், அந்தப் பகுதியிலுள்ள உறவினர்களுக்கிடையே மோதல் உருவாகும் பதற்ற நிலை ஏற்பட்டவுடன் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும், பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!