24 மணிநேரத்தில் கொழும்பில் 541 தொற்றாளர்கள்!

கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில், 541 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று இராணுவத்தளபதி சவேந்திர இன்று காலை தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளிலேயே அதிகமானோர் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதிக்குப் பின்னர் நேற்று வரையில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 5127 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!