நாட்டில் 382 புதிய தொற்றாளர்கள்!

நாட்டில் நேற்று 382 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை, 17,674 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அனைவரும், மினுவங்கொட- பேலியகொட கொத்தணிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களையும் சேர்ந்த இந்த கொத்தணிகளில் இதுவரை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,941 ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை, தற்போது 5 ஆயிரத்து 810 தொற்றாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!