கொரோனாவுக்கு மேலும் மூவர் பலி!

மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!