சில் துணி வழக்கில் இருந்து லலித், அனுஷ விடுதலை!

சில் துணி வழக்கின் குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பல்பிட்டிய ஆகியோரை விடுவித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் முன்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் இந்த இருவரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு, 3 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!