தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பில் இராணுவ தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பில் இந்த வாரம் முக்கிய தீர்மானம் எட்டப்படும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

“தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவதா என்பது தொடர்பில் இந்த வாரம் இறுதித் தீர்மானத்தினை எடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலை தொடர்பில் பகுப்பாய்வு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளோம்.

குறித்த பகுதியில் கொரோனா அபாயம் தொடர்ந்தும் காணப்படுமாயின் தனிமைப்படுத்தல் உத்தரவை மேலும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அவ்வாறு கொரோனா அபாயம் இல்லாத பகுதிகளை விடுவிப்பதற்கும் நாம் தீர்மானித்துள்ளோம்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள தோட்டப்பகுதிகள் மற்றும் குடியிருப்பு தொகுதிகளில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையினை எடுத்துள்ளோம்.

எவ்வாறாயினும் இந்தவார இறுதியில் இறுதித் தீர்மானத்தினை அறிவிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்” என இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!