கிழக்கில் தொற்றாளர் தொகை 127 ஆக அதிகரிப்பு!

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 127ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 82பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 15 பேருக்கும், அம்பாறை பிராந்தியத்தில் 8 பேருக்கும், கல்முனைப் பிராந்தியத்தில் 22 பேருக்குமாக மொத்தம் 127 பேர் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் இனங்காணப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒல்லிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணாவார். வாழைச்சேனையில் ஒருவரும், அக்கறைப்பற்றில் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!